நியூயார்க் : நியூயார்க்கில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் உள்ள பரூக்லைன் மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 13 பேர் பலத்த காயங்களுடன் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கட்டுமானப் பணிகளின் போது பயன்படுத்தக் கூடிய ஆரஞ்சு நிற மேலாடை அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், வெடிபொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை,” என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பயணிகள் ரத்த காயங்களுடன் படுத்துக்கிடப்பதும், அவர்களுக்கு சக பயணிகள் உதவி செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.