அடங்காத வடகொரியா…மீண்டும் உலக நாடுகள் அதிர்ச்சி: ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை சோதனை!!

சியோல்: வடகொரியா நாடு ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது.

அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும், தங்கள் ஆயுத பலம் பற்றி உலக நாடுகளுக்கு வெளிப்படும் வகையிலும், இந்த ஏவுகணைகளை பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி, 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா பரிசோதனை செய்தது.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வகை ஏவுகணையானது ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு செல்லும் திறன் பெற்றது.

அமெரிக்காவையும் அடைந்து தாக்க கூடிய வல்லமை பெற்றது. இந்த ஏவுகணை 1,100 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளது. இதேபோன்று, 6 ஆயிரம் கி.மீ. உயரத்தில், ஒரு மணிநேரம் பறந்து சென்று பின்பு ஜப்பானிய கடல் பகுதிகளில் விழுந்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.

இதனை தென்கொரியாவின் பாதுகாப்பு படை பிரிவு இன்று காலை தெரிவித்து உள்ளது. வடகொரியாவின் ஹேம்ஹங் பகுதியில் வைத்து பரிசோதனை செய்யப்பட்ட இந்த இரு ஏவுகணைகளும் 110 கிலோ மீட்டர்கள் (68 மைல்கள்) தொலைவை சென்று தாக்கியுள்ளது.

அதிக அளவாக 25 கி.மீ. (15.5 மைல்கள்) உயரத்திற்கு பறந்து சென்றுள்ளன என்றும் தெரிவித்து உள்ளது. வடகொரியாவின் சமீபத்திய பரிசோதனையை தொடர்ந்து தென்கொரியாவின் பாதுகாப்பு, ராணுவ மற்றும் உளவு அமைப்புகள் இணைந்து கூட்டாக அவசரகால ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளன.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.