பாகிஸ்தான் பல்கலை.,யில் குண்டுவெடிப்பு தாக்குதல் : சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சோகம்..!

Author: Babu Lakshmanan
26 April 2022, 7:32 pm
Quick Share

பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியில் உள்ள பல்கலையில் பாகிஸ்தான் மக்களுக்கு சீன மொழி கற்பிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில், 2 சீன பெண்கள், வேன் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர். இரண்டு சீன பெண்களை குறிவைத்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், ரிமோட் மூலம் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Views: - 1260

0

0