இர்பின்: உக்ரைன் அகதிகள் உடைந்த பாலத்தில் பயணித்து அண்டை நாடுகளுக்கு செல்லும் உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய ராணுவமும் வழிவிட்டு அவர்கள் நாட்டை விட்டுச் செல்ல அனுமதி அளித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 15 நாட்களாக நீடித்து வருகிறது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் குடிமக்கள் தற்போது அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். அகதிகளாக அண்டை நாடுகளான ஹங்கேரி, போலந்து, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.
இவர்களுக்கு தற்போது உக்ரைன் நாட்டில் போர் புரிந்து வரும் ரஷ்ய படைகளை ஒதுங்கி வழிவிடத் துவங்கியுள்ளன. தங்களது உடமைகள், குழந்தைகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு குளிர் நிறைந்த நிறைந்த கரடுமுரடான பகுதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் பல நாட்களாக பயணித்து அண்டை நாடுகளைச் சென்றடைகின்றனர்.
தலைநகர் கீவ்வின் வடமேற்கு பகுதியில் உள்ள பூச்சா, ஈர்ப்பின் நகரங்களிலிருந்து உடைந்துபோன பாலத்தைத் தாண்டி குடிமக்கள் பலர் நடந்து செல்லும் காட்சி மனதை காண்போரை கவலை அடையச் செய்கிறது.
இவர்கள் செல்லும் வழியில் காடுகள், ஆறுகள் என பல குறுக்கிட்டாலும் தங்கள் குழந்தைகளின் உயிரைக் காக்க பலர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் புகைப்படங்கள் வெளியாகி வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.