‘எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் தஞ்சம் அளிக்க நாங்க ரெடி’: உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மால்டோவா அதிபர்..!!

லண்டன்: உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மால்டோவா நாட்டின் அதிபர் மையா சண்டு தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. போரை முன்னிட்டு லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு புலம்பெயர உக்ரைன் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தனியாக செல்ல இயலாதவர்கள் ரயில்களை பயன்படுத்த கூறப்பட்டுள்ளது. அவர்களை லிசிசான்ஸ்க், ரூபிஜ்னே மற்றும் ஸ்வாடோவ் ரயில் நிலையங்களுக்கு செல்லும்படி கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ சுரங்க பாதையில் உக்ரைன் மக்கள் தற்காத்து கொள்வதற்காக தஞ்சமடைந்து உள்ளனர். உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

ரஷியா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மால்டோவாவின் அதிபர் அறிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பால் உக்ரைன் எல்லையோர மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

பிரதமரை பாராட்ட முதலமைச்சருக்கு மட்டும் மனம் வரவில்லை.. தமிழிசை விமர்சனம்!

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…

22 minutes ago

இது கூட பண்ணலைன்னா நீங்க இயக்குனரா?- அட்லீயை கண்டபடி கேட்ட ஆனந்த்ராஜ்!

பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…

1 hour ago

சாட்டையை சுழற்றுவேன் சுழற்றுவேன் என CM சொன்னார்.. ஆனால் சுழற்றியவர் PM : செல்லூர் ராஜு!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…

1 hour ago

பாஜகவுடனான ஆதாயத்திற்காக மதுரை ஆதினம் புகார்… அமைச்சர் பரபரப்பு கருத்து!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…

2 hours ago

பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்

வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…

2 hours ago

அஜித் ரசிகர்கள் கண்ணியமானவர்கள்.. விஜய்யுடன் ஒப்பிட்டு திவ்யா சத்யராஜ் பதிவு!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…

3 hours ago

This website uses cookies.