இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த 19 நபர்களிடம், கியு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது இலங்கையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.
ஏற்கனவே இலங்கையிலிருந்து வந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர், மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள நிலையில், தற்போது மேலும் 19 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு, அரிசி, பருப்பு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்தப் பொருட்களை விநியோகிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.