அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கான்சின்- மடிசான் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிலா குறித்து ஆய்வு செய்தனர். 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறையை அடிப்படையாக வைத்து நடந்த இந்த ஆய்வில்,பூமியின் துணைக்கோளான நிலா, பூமியை விட்டு மெதுவாக விலகிச் செல்வதாகவும், இதனால் அடுத்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் எனவும் விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலாவானது பூமியை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு 3.8 செ.மீ., தூரம் நிலா நகர்ந்து வருகிறது. இதனால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இது இப்படியே நீடித்தால் அடுத்த 20 கோடி ஆண்டில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும்.140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை இதற்கு காரணமாக உள்ளது.
இதன் சக்திகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக நிலா விலகிச் செல்கிறது. நிலா மெதுவாக விலகி செல்வதால் பூமியின் சுழலும் திறன் குறையும்.எனவும்
விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.