உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ரஷ்யப் படைகள் கடந்த 10ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நகரங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இன்றும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மரியுபோலில் உள்ள மகப்பேறு மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதலில் கர்ப்பிணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அந்தப் பெண்ணை உக்ரைன் ராணுவத்தினர் ஸ்டெரச்சரில் வைத்து கொண்டு சென்ற புகைப்படம் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், இன்று உயிரிழந்து விட்டதாகவும், வயிற்றில் இருந்த குழந்தையும் பலியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மரியுபோல் பகுதியில் மட்டும் ரஷ்ய படைகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 2க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.