உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ரஷ்யப் படைகள் கடந்த 10ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நகரங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இன்றும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மரியுபோலில் உள்ள மகப்பேறு மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதலில் கர்ப்பிணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அந்தப் பெண்ணை உக்ரைன் ராணுவத்தினர் ஸ்டெரச்சரில் வைத்து கொண்டு சென்ற புகைப்படம் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், இன்று உயிரிழந்து விட்டதாகவும், வயிற்றில் இருந்த குழந்தையும் பலியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மரியுபோல் பகுதியில் மட்டும் ரஷ்ய படைகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 2க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.