உலகையே அலற விட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு மீது தாக்குதல்.. ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!
ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் வீசிய ஏவுகணைகள், ஈராக் குர்திஸ்தானி உள்ள இஸ்ரேல் அலுவலகம் மீது பாய்ந்தன.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் குர்திஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
பிரபல தொழிலதிபர் பெஷ்ரா டிசாயீயும் கொல்லப்பட்டுள்ளார்.
குர்திஸ்தானின் அர்பில் நகரில் ஈரான் எதிர்ப்பு பயங்கரவாத குழுக்கள் மற்றும் உளவுத்துறை தலைமை அலுவலகத்தை அழித்ததாக ஈரான் பாதுகாப்பு படை கூறியிருக்கிறது.
ஈரானின் தெற்கு நகரங்களான கெர்மன் மற்றும் ராஸ்கில் தாக்குதல் நடத்தி, ஈரானியர்களை கொன்றதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உலகையே அலறவிடும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இது பொறுப்பற்ற செயல் என்று கூறியிருக்கிறது. மேலும், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.