அரசின் ரகசியங்களை கசிய விட்ட வழக்கு.. இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அரசின் ரகசியங்களை கசிய விட்ட வழக்கு.. இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதாவது, அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாஃப் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இதே வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

இம்ரான் கான் மீது நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதில், பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த பொருட்களை அவர் கருவூலத்தில் வழங்காமல் பயன்படுத்திய வழக்கில் அவருக்கு கடந்த வருடம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை தொடர்ந்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னரே பரிசு பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஆனாலும், இம்ரான் கான் வெளிவர முடியவில்லை. ஏனென்றால், இன்னொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதுதான் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக கூறப்படும் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

அதாவது, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உயரதிகாரிகளுடன் விரைவாக பேசும் வகையில் இருக்கும் சைபர் கேபிள் சேவையை இம்ரான் கான் தவறாக பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் தான் இம்ரான் கான் மீதான சைபர் கேபிள் முறைகேடு (அரசு ரசிகசியங்களை கசியவிட்ட) வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதில், இம்ரான் கான் மற்றும் அவரது கூட்டாளியான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

13 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

14 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

14 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

14 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

15 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

16 hours ago

This website uses cookies.