76 வயதான டொனால்டு ட்ரம்ப் ஆபாச நடிகையான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியது.
இதனை மறைப்பதற்காக நடிகைக்குத் தேர்தல் பரப்புரைக்கான நிதியில் இருந்து ட்ரம்ப் பணத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்டு அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மன்ஹாட்டான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளது. ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், இந்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக சாட்சியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகைக்குப் பணம் வழங்கியதிற்கான ஆதாரத்தையும் வழக்கறிஞர் அலுவலகம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டு தான் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரம்ப் தற்போது புளோரிடா மாகாணத்தில் உள்ள நிலையில் விசாரணைக்காக அவர் நியூயார்க் வர வேண்டும்.
வழக்கை எதிர்கொள்வதற்காக அவரே நியூயார்க் திரும்பி நீதிமன்றத்தில் சரணடைவார் எனக் கூறப்படுகிறது.
கிரிமினல் வழக்கு விசாரணை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஆவண புகைப்படம் மற்றும் கை ரேகை போன்றவை எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.
எனவே, ட்ரம்ப்பையும் கையில் விலங்கு பூட்டி கைது செய்து, மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதற்கு முட்டுக்கட்டை போடவே ஜோ பைடன் அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.