அடுத்த வாரத்தில் இந்தியா வருகிறது கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள்: இறுதிக்கட்ட பரிசோதனை தீவிரம்..!!

Author: Rajesh
13 February 2022, 4:38 pm
rabel flights - updatenews360
Quick Share

பிரான்சில் இருந்து கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016ம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

அதன்படி, 2020ல் முதலாவதாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன்பிறகு பல குழுக்களாக இதுவரை மொத்தம் 33 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.

மீதமுள்ள 3 போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன. அதற்கான இறுதிக்கட்ட சோதனைப் பணிகள் பிரான்சில் நடைபெற்று வருகின்றன.

Views: - 1007

0

0