விமானத்தில் ஏற்பட்ட கோளாறு.. கரீபியின் தீவில் தவித்த கனடா நாட்டு பிரதமர்!!
புத்தாண்டை கொண்டாட கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் கரீபியன் தீவுக்கூட்டத்தில் உள்ள ஜமைக்கா நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு கடந்த 2ம் தேதி ஜஸ்டின் ட்ரூடோ கனடா திரும்பவிருந்தார். ஆனால், பிரதமரின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து ட்ரூடோ கனடா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, கனடாவில் இருந்து விமானப்படையை சேர்ந்த 2 விமானங்கள் ஜமைக்கா விரைந்தன. அதில் ஒரு விமானத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர், ஜமைக்கா சென்ற விமானப்படை விமானத்தின் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தன் குடும்பத்துடன் கனடா திரும்பினார். அவர் கடந்த 4ம் தேதி கனடா வந்தடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தபோதும் கனடா பிரதமரின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் காலதாமதமாக இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.