அர்ஜெண்டினாவில் ரயில் நடைமேடையில் காத்திருந்த பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து ஓடும் ரயிலின் குறுக்கே விழுந்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினாவில் கோன்சலஸ் கேட்டனில் உள்ள இண்டிபெண்டண்ட் நிலையத்தில் கேண்டெலா என்ற பெண் பயணி ஒருவர் ரயிலுக்கு காத்திருந்தார். தண்டவாளத்தில் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென அப்பெண் மயக்கநிலை அடைந்து தடுமாறி நடக்கத் துவங்கினார்.
உடனிருந்த பயணிகள் சுதாரிப்பதற்குள் யாரும் எதிர்பாராத வகையில் ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்தார் அந்தப் பெண். அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரயிலை நிறுத்தினர். ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சிக்கி லேசான காயத்துடன் தப்பிய அப்பெண்ணை ரயில்வே காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தபின் தற்போது வீடு திரும்பியுள்ளார் கேண்டெலா. நிகழ்ந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த கேண்டெலா, எனக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மயங்கி விழுந்தேன். எனக்கு முன்னால் இருப்பவரை நான் எச்சரிக்க முயற்சித்தேன்.
ஆனால் நான் ரயிலில் மோதிய தருணம் கூட நினைவில் இல்லை. நடந்த எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த மார்ச் 29ம் தேதி நடந்த விபத்தின் பதைபதைக்கும் காட்சிகளை அந்நாட்டு போக்குவரத்துத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.