இலங்கை தலைநகர் கொழும்பில் வீதியை மறித்து நடுவீதியில் டயர் எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆளும் ராஜபக்சே அரசு பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஒரு கட்டத்தில் இலங்கை முழுவதும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. இதையடுத்து மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர், எம்பி வீடு என அனைத்து இடங்களில் மக்கள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.
சவாலுக்கு மத்தியில் பதவியேற்றுள்ளேன், நிச்சயம் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கொழும்பு – புதுக்கடை பகுதியில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து நடு வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மக்கள் கூறுகையில், எமக்கு ரணிலும் வேண்டாம்,u சஜித்தும் வேண்டாம், கோட்டாகமவிற்கு செல்லவுள்ளோம். மக்கள் சாப்பிட இல்லாமல் இருக்கிறார்கள்.
25 நாட்களாக எரிவாயு வரவில்லை. மண்ணெண்ணெயும் இல்லை. நாங்கள் என்ன செய்வது. உடனடியாக எங்களுக்கு தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.