சருமம் கருத்துபோய்விட்டால் அதனை பளீச்சென்று மாற்ற பல விதமான ப்ளுச் செயல்முறைகள் உள்ளன. பெரும்பாலானவர்கள் கடைகளில் விற்கப்படும் பொருட்களை பயன்படுத்தி தங்கள் சருமத்தை ஒளிர வைக்க முயற்சி செய்கின்றனர். இதன் மூலமாக ரிசல்ட் கிடைத்தாலும் அது நிரந்தரமான ஒன்றாக இருக்காது.
மேலும் இரசாயனங்கள் நிரம்பிய பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே கூடுமானவரை இயற்கை முறைகளை பின்பற்றுவது சிறந்தது. அந்த வகையில் இன்று கருத்துப்போன சருமத்தை ஒளிர வைக்க உதவும் ஒரு இயற்கை முறை குறித்து பார்க்கலாம்.
வீட்டில் இருந்தவாறே ப்ளீச் செய்ய முதலில் புளியை சுடு தண்ணீரில் ஊற வையுங்கள். புளி ஊறியதும் கரைத்து புளி கரைசலை தனியாக எடுத்து கொள்ளவும். இந்த புளி கரைசலில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
இந்த கலவை சிறிது நேரம் ஊறட்டும். அரை மணி நேரம் கழித்து முதலில் உங்கள் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான உங்கள் முகத்தில் நாம் ஏற்கனவே ஊற வைத்த புளி கலைவயை தடவவும். சில நிமிடங்கள் காத்திருந்து முகத்தை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும். பின்னர் லேசாக துண்டு ஒன்று வைத்து ஒத்தி எடுக்கவும். இதனை சில வாரங்களுக்கு செய்து வந்தால் கருத்துப்போன முகம் தெளிவாகி, உங்கள் ஒரிஜினல் நிறத்தைப் பெறலாம்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.