நம் அன்றாட குளியல் நம்மை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்கும். ஆனால் தலைமுடியை தினமும் கழுவலாமா? உங்கள் தலைமுடியை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்? இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.
தினமும் முடியைக் கழுவுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கை முறையைப் பொறுத்து ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் ஒரு முறை உங்கள் தலைமுடியைக் கழுவலாம். இது தவிர உங்களுக்கு அரிப்பு இருந்தாலோ அல்லது உங்கள் உச்சந்தலையில் செதில்களாக இருந்தாலோ, உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும்.
உங்கள் தலைமுடியைக் கழுவ ஷாம்பு மிகவும் வலுவாக இருக்கக்கூடாது மற்றும் சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஷாம்புகள் உங்கள் முடியின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. எனவே உங்கள் கூந்தல் மென்மையாக இருக்கும்.
மேலும் தலைமுடியைக் கழுவ வெந்நீரைப் பயன்படுத்துவது பல பெண்கள் குளிர்காலத்தில் செய்யும் ஒன்று. சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது தலைமுடியை முற்றிலும் உலர்த்துகிறது.
உங்கள் உடலுக்கு ஒரு தனி துண்டு மற்றும் உங்கள் தலைமுடிக்கு ஒரு தனி துண்டு பயன்படுத்த வேண்டியது அவசியம். உடம்பு க்கு பயன்படுத்தும் துண்டு மிகவும் மென்மையாக இருக்க வேண்டும்.
தலைமுடியை கழுவிய பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியம். ஒரு நல்ல கண்டிஷனர் உங்கள் முடி உதிர்வை குறைக்க உதவும். பலர் தற்போது ஹேர் மசாஜ் செய்து விட்டு தலைமுடியைக் கழுவ விரும்புகிறார்கள். நீங்கள் உச்சந்தலையில் எண்ணெயைப் பயன்படுத்தினால், அதனை நன்றாக கழுவுவதை உறுதிப்படுத்தவும். ஏனெனில், அதிகப்படியான எண்ணெய் பொடுகுக்கு வழிவகுக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.