Categories: அழகு

சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள் செய்யும் மாயாஜாலம்!!!

ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படும் கஸ்தூரி மஞ்சள் சருமத்திற்கு பயன்படுத்தினால், ‌கிடைக்கும் நன்மை மற்றும் பயன்கள் என்ன? என்று பார்ப்போம். பலரும் தங்கள் முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது உண்டு. சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் பெரும் பங்கு வகிக்கின்றது. முக அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த கஸ்தூரி மஞ்சள் இயற்கை நமக்கு அளித்த வரம் என்றே கூறலாம். முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள் போன்ற அனைத்து வகையான சருமம் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரேயொரு சக்தி வாய்ந்த பொருள் இந்த கஸ்தூரி மஞ்சள் ஆகத்தான் இருக்க முடியும்.

கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள்:
இது சருமத்திற்கு நிறைய நன்மைகளை தருகிறது . தோல் நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. சாதாரண மஞ்சளுக்கு பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாகவும், பொலிவுடன் காணப்படும்.

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விட அதிக மணம் உடையது. கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றுடன் கலந்து கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் உடையும்.

கஸ்தூரி மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெய் கலந்து அடிப்பட்ட புண் அல்லது சிரங்குகள் மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சளை பிற பொருட்கள்களுடன் எப்படி உபயோகிக்கலாம்:
சருமத்தை பளபளக்க செய்ய வீட்டிலேயே கிடைக்கும் 2 பொருட்களை பேஸ்பேக் போட்டுக் கொள்ளலாம். இது உங்கள் சருமத்தை பிரகாசமாகவும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சருமத்தையும் கொடுக்கும். மேலும் சரும பொலிவுக்கு உதவும் அந்த பேக்கை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

கஸ்தூரி மஞ்சள் பேஸ்பேக்:-
தேவையான பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – 1டீஸ்பூன்

எப்படி செய்வது ?
ஒரு சின்ன கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் உங்களுக்கு தேவையான கஸ்தூரி மஞ்சளை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள். இதனை உங்கள் முகத்தில் தடவி விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

இது உங்கள் முகத்தில் உள்ள் கருவளையம் மற்றும் கறையைப்‌ போக்கி உங்கள் சருமத்தை ஒளிரச் செய்ய உதவும். அதேபோல், கஸ்தூரி மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதை தனியாகவோ‌ அல்லது தேன் போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தலாம்.

இந்த கஸ்தூரி மஞ்சள் முற்றிலும் இயற்கையானது . இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை . இருப்பினும், இந்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவதற்கு முன் இதனால் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை உங்களின் கைகளில் சிறிதளவு வைத்து பார்த்து விட்டு. பின்னர், பயன்படுத்துவது நல்லது.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

7 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

8 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

8 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

9 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

10 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

10 hours ago

This website uses cookies.