துபாயில் நடைபெறும் 12 வது சைமா; 11 விருதுகளுக்கு மோதும் ரஜினியின் ஜெயிலர்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா (சைமா) வரும் செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது.இது 12 வது விருது வழங்கும் விழா.

ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த படங்களில் இருந்து சிறந்த படங்களும், கலைஞர்களும் தேர்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும். இந்த வருடம் நடைபெறும் விழாவில் பங்குபெறும் நட்சத்திரங்கள் கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் 11 விருதுகளுக்கும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் 9 விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் பிரிவில் ரஜினிகாந்த் (ஜெயிலர்), விஜய் (லியோ), விக்ரம் (பொன்னியின்செல்வன் 2), சிவகார்த்திகேயன் (மாவீரன்), உதயநிதி ஸ்டாலின் (மாமன்னன்), சித்தார்த் (சித்தா).

சிறந்த நடிகைக்கான பிரிவில் திரிஷா (லியோ), நயன்தாரா (அன்னபூரணி), ஐஸ்வர்யாராய் (பொன்னியின்செல்வன் 2), கீர்த்திசுரேஷ் (மாமன்னன்), மீதா ரகுநாத் (குட்நைட்), ஐஸ்வர்யா ராஜேஷ் (பர்ஹானா).

சிறந்த இயக்குனர் பிரிவில் நெல்சன் (ஜெயிலர்), லோகேஷ் கனகராஜ் (லியோ), மணிரத்னம் (பொன்னியின்செல்வன் 2), வெற்றிமாறன் (விடுதலை), அருண் குமார் (சித்தா), மாரி செல்வராஜ் (மாமன்னன்)

சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் இளையராஜா (விடுதலை), ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின்செல்வன் 2), அனிருத் (ஜெயிலர், லியோ), சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா), நிவாஸ் கே.பிரசன்னா (டக்கர்)

சிறந்த படம் பிரிவில் ஜெயிலர், மாமன்னன், லியோ, பொன்னியின் செல்வன் 2, விடுதலை.

இன்னும் பல பிரிவுகளில் ஜெயிலர் மற்றும் மாமன்னன் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.