சிம்பு நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பத்து தல. கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சிம்பு ஏஜிஆர் என்கிற டான் கேரக்டரில் நடித்துள்ளார்.
தமிழகம் முழுக்க சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து பத்து தல படம் பார்க்க குழந்தை குட்டிகளுடன் வந்த நரிக்குறவர் சமூகத்தினரை சென்னையில் ரோகினி திரையரங்க ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் நேற்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீண்டாமை , இனவெறி, சாதி உள்ளிட கோணத்தில் இந்த விவகாரம் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து இது குறித்து விளக்கம் அளித்த ரோகிணி திரையரங்கு உரிமையாளர் பன்னீர்செல்வம், பத்து தல படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் அவர்களை படம் பார்க்கவும் அனுமதித்து வீடியோ வெளியிட்டனர். இருந்தாலும் அவர்கள் கூறும் சாக்குப்போக்கை மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 10 வயசில் ரஜினியின் தர்பார் படம் பார்க்க அவரது பேரன்களை மட்டும் அனுமதிக்கலாமா? என விவாதங்கள் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் நேற்று விஜய் சேதுபதி முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது ரோகினி திரையரங்க சர்ச்சை குறித்து கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘எங்கேயும் எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்கு படைக்கப்பட்டுள்ளது. அதில் வேற்றுமையை யார் எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது’ என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பதில் சம்மந்தப்பட்ட ரோகினி திரையரங்க ஊழியரை பளார் என்று அறைந்தது போல் உள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.