என் அப்பா இறந்தது சந்தோஷம் தான்… மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மகன் உருக்கமான பேச்சு!

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாரிமுத்துவின் மகன் பேட்டியில், தன்னுடைய அப்பா இந்த நேரத்தில் இறந்தது ஒரு விதத்தில் சந்தோசம் தான். ஏன் என்றால் அவர் சினிமாவில் சாதிக்கவேண்டும் என நிறைய போராடினார். அதற்காக அவர் நிறைய கஷ்டப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அவர் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்தது. அவர் திறமையை நிரூபித்துவிட்டு நினைத்ததை சாதித்துவிட்டு தான் சென்றிருக்கிறார். எனவே அவர் இந்த நேரத்தில் மரணித்தது ஒரு விதத்தில் எங்களுக்கு சந்தோசம் தான். அவர் திறமை மக்களுக்கு தெரியாமல் இருந்திருந்தால் தான் இன்னும் வருத்தமாக இருந்திருக்கும். அவருக்கு மூச்சே சினிமா தான். அது சீரியலோ, திரைப்படமோ அவர் எதோ ஒன்றில் அவர் சாதிக்கவேண்டும் என நினைத்து கனவுகண்டார் சாதித்துவிட்டார் என உருக்கமாக பேசியுள்ளார் அவரது மகன்.

Ramya Shree

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

5 minutes ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

31 minutes ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

47 minutes ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

1 hour ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

2 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

2 hours ago

This website uses cookies.