என் அப்பா இறந்தது சந்தோஷம் தான்… மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மகன் உருக்கமான பேச்சு!

Author: Shree
9 September 2023, 8:30 pm
marimuthu son
Quick Share

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாரிமுத்துவின் மகன் பேட்டியில், தன்னுடைய அப்பா இந்த நேரத்தில் இறந்தது ஒரு விதத்தில் சந்தோசம் தான். ஏன் என்றால் அவர் சினிமாவில் சாதிக்கவேண்டும் என நிறைய போராடினார். அதற்காக அவர் நிறைய கஷ்டப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அவர் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்தது. அவர் திறமையை நிரூபித்துவிட்டு நினைத்ததை சாதித்துவிட்டு தான் சென்றிருக்கிறார். எனவே அவர் இந்த நேரத்தில் மரணித்தது ஒரு விதத்தில் எங்களுக்கு சந்தோசம் தான். அவர் திறமை மக்களுக்கு தெரியாமல் இருந்திருந்தால் தான் இன்னும் வருத்தமாக இருந்திருக்கும். அவருக்கு மூச்சே சினிமா தான். அது சீரியலோ, திரைப்படமோ அவர் எதோ ஒன்றில் அவர் சாதிக்கவேண்டும் என நினைத்து கனவுகண்டார் சாதித்துவிட்டார் என உருக்கமாக பேசியுள்ளார் அவரது மகன்.

Views: - 2560

7

1