தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான ஜி.மாரிமுத்து, வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்து குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “கத்தி முனையில் கறுப்பு சிங்காரம்” என்ற பெயரில் வடிவேலுக்காக ஒரு கதை எழுதியிருந்தாராம். அப்போது வடிவேலு நடித்த “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” தோல்வியை தழுவியுள்ளது. அந்த சமயத்தில் இந்த கதையை வடிவேலுவிடம் கூறினாராம் மாரிமுத்து.
இந்த கதையில் ஒரு வயதான மூதாட்டியும், அவருக்கு பேரனும் இருப்பார்களாம். அந்த மூதாட்டி, பேரன் இருவருமே வடிவேலுதானாம். அதில் மிக சுவாரஸ்யமான காமெடி காட்சிகளை எழுதியிருந்ததாக மாரிமுத்து கூறினார். வடிவேலுவும் இந்த கதையில் நடிப்பதாக ஓகே சொன்னாராம். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால் வடிவேலு மிக அதிகமாக சம்பளம் கேட்டதால் இத்திரைப்படத்தை உருவாக்க முடியவில்லையாம்.
ஏற்கனவே வடிவேலு ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருந்ததை, ஏஜிஎஸ் நிறுவனம் “தெனாலி ராமன்” திரைப்படத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாம். இத்திரைப்படத்தில் அவர் நடித்திருந்தால், “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்திருக்கலாம் என கூறியுள்ளார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.