செய்வினை வெச்சாங்க.. கை முழுக்க இரத்த கீறல்கள்.. பகீர் கிளப்பிய 90ஸ் நாயகி மோகினி..!

இயக்குனர் கே ஆர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈரமான ரோஜாவே மிகப் பெரிய ஹிட்டான இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மோகினி. முதல் படமே பெரிய ஹிட் கொடுத்தது என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு குவிந்தன.

மேலும், ராசியான நடிகையாகவும் மோகினி பார்க்கப்பட்டார். அவற்றில் புதிய மன்னர்கள், நாடோடி, பாட்டுக்காரன் போன்ற ஹிட் படங்களும் அடங்கும். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் பிறமொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக, ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமார் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)

இந்நிலையில், 1999 ல் மோகினி பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பின்னர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள மோகினி தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய கதையை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் வர கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்திற்குள் சென்று விட்டதாகவும், கெட்ட கெட்ட கனவுகளும் அந்த சமயத்தில் ஆரம்பித்ததாகவும் பேய் பிசாசு கனவுகள் அடிக்கடி வந்ததாக கூறி அதன் காரணமாக தூக்கமும் போய்விட்டது. அப்போது, ஒரு ஜோசியரை சந்தித்தபோது அவர் தனக்கு செய்வினை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!

இதனால் தான் இன்னும் அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்து மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மோகினிக்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போலவே தனக்கு தற்கொலை எண்ணம் அதிகமாக வந்தது என்று தெரிவித்தார். மேலும், அதன் பிறகு ஒரு சிவாச்சாரியார் அவரை சந்தித்து செய்வினை போன்ற விஷயங்கள் உண்மையா என்று கேள்வி எழுப்பிய போது நல்லது இருக்கிறது என்றால் கெட்டதும் கண்டிப்பாக உள்ளது என அவர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும், அப்போது கடவுள் யார் என்று தேட ஆரம்பித்த நிலையில், கனவில் இயேசு வந்தார் அவர் வந்த நாளிலிருந்து நான் விடுதலை கிடைத்ததாக கூறி மன நிம்மதி அடைய துவங்கியதாகவும் கூறினார். மேலும், பேட்டியில் ஒரு முறை கையில் அறுத்துக் கொண்டேன் கை முழுக்க இரத்த கீறல்கள் ஏற்பட்டது மற்றும் எலி மருந்தை கேக்கில் கலந்து குடித்தேன் என்றும், மோகினி கிட்டத்தட்ட 136 தூக்க மாத்திரைகளை அப்படியே சாப்பிட்டு உள்ளேன் என்று பேசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.