அழகான , அம்சமான நடிகையாக தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை சதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார். நடிகை சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அவருக்கு மாபெரும் புகழை தேடித்தந்த அப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஜெயம் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழ் மொழியில் நடிகையாக அறிமுகமானார். இதன் மூலம் கோலிவுட்டிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெயம் படத்தில் நடித்ததற்காக சதாவிற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகை சதா அவர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம்ஜோடியாக அந்நியன் திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார்.
இதனை தொடர்ந்து, பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை சதா ஒரு சில தோல்வி படங்களால் மார்க்கெட்டை இழந்தார். நடிகை சதா தமிழில் இறுதியாக நடித்த படம் “டார்ச் லைட்” அதன் பிறகு நடிகை சதாவை வேறு எந்த படங்களில் காண முடியவில்லை. இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா அவ்வப்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு நடிகையாக சினிமாவில் தான் அனுபவித்த மிகவும் மோசமான கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, நான் தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்.
அப்படத்தின் காட்சி ஒன்றில் என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதுபோன்ற அருவருப்பான காட்சியில் நான் நடிக்கவே மாட்டேன் என இயக்குனரிடம் கூறினேன். ஆனால், படத்தின் கதைக்கு அது மிகவும் தேவை என கூறி படமாக்கிவிட்டார். அந்த காட்சி நடித்து முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தேம்பி தேம்பி அழுதேன். இன்று வரை அந்த படத்தில் ஏன் நடித்தேனோ? என வருத்தப்பட்டு வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
This website uses cookies.