அந்த நடிகர் என்னை…. ச்சைக் அருவருப்பா இருக்கு – கசப்பான அனுபவத்தை கூறி அழுத நடிகை சதா!

Author: Shree
22 September 2023, 12:06 pm
sadha
Quick Share

அழகான , அம்சமான நடிகையாக தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை சதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார். நடிகை சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அவருக்கு மாபெரும் புகழை தேடித்தந்த அப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஜெயம் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழ் மொழியில் நடிகையாக அறிமுகமானார். இதன் மூலம் கோலிவுட்டிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெயம் படத்தில் நடித்ததற்காக சதாவிற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகை சதா அவர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம்ஜோடியாக அந்நியன் திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார்.

இதனை தொடர்ந்து, பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை சதா ஒரு சில தோல்வி படங்களால் மார்க்கெட்டை இழந்தார். நடிகை சதா தமிழில் இறுதியாக நடித்த படம் “டார்ச் லைட்” அதன் பிறகு நடிகை சதாவை வேறு எந்த படங்களில் காண முடியவில்லை. இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா அவ்வப்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு நடிகையாக சினிமாவில் தான் அனுபவித்த மிகவும் மோசமான கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, நான் தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்.

அப்படத்தின் காட்சி ஒன்றில் என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதுபோன்ற அருவருப்பான காட்சியில் நான் நடிக்கவே மாட்டேன் என இயக்குனரிடம் கூறினேன். ஆனால், படத்தின் கதைக்கு அது மிகவும் தேவை என கூறி படமாக்கிவிட்டார். அந்த காட்சி நடித்து முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தேம்பி தேம்பி அழுதேன். இன்று வரை அந்த படத்தில் ஏன் நடித்தேனோ? என வருத்தப்பட்டு வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.

Views: - 727

1

0