தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி பின்னர் மழை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியவர நடிகை ஸ்ரேயா சரண். நல்ல அழகு துரு துரு நடிப்பு என அறிமுகமான புதிதிலே அத்தனை ரசிகர்களையும் வளைத்துவிட்டார்.
தெலுங்கு , தமிழ் , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். இதனிடையே திடீரென 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர், கப்சா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது 40 வயதாகும் ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து யங் ஹீரோயின் போன்று அழகு குறையாமல் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை ஸ்ரேயா பேசும்போது நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப காலகட்டங்களில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொண்டேன். ஒரு முறை படப்பிடிப்பை விட்டு ஓடிப் போய் விட்டேன். கந்தசாமி படத்தில் நடித்த போது ஒரு காட்சிக்காக நிறைய டேக்கள் எடுத்தார்கள். ஆனால், ஹீரோ விக்ரம் பொறுமையாக என்னோடு நடித்ததை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது.
அதேபோல், ரஜினி அவர்களுடன் சிவாஜி படத்தில் நடித்த போது அவர் எனக்கு பல நல்ல விஷயங்களை நல்ல அறிவுரைகளை கூறினார். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் சக்சஸ்ஃபுல் படங்கள் செய்கிறீர்கள், நாளை இந்த நிலைமை மாறிவிடலாம். தோல்விகளை கூட சந்திக்க வேண்டிவரும் இருந்தாலும், ரசிகர்களோடு மகிழ்ச்சியாக மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னதாக ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.