சிவாஜி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்பம் மீண்டும் ரீமேக் ஆகிறது : சிவாஜி ரோலில் அந்த பிரபலமா..?

1987ம் ஆண்டு சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”. மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தை சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் சார்பாக சித்ரா லட்சுமணன் தயாரித்திருந்தார். மிக பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்த இப்படத்தில் சத்யராஜ் தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கச் செல்லும்போது போலீஸாரிடம் மாட்டிக்கொள்வார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதியான சிவாஜி கணேசன், சத்யராஜ் நிரபராதி என உணர்ந்துகொள்வார். எனினும் சத்யராஜிற்கு எதிராக பல சாட்சியங்கள் இருக்க, சத்யராஜ் தனது வீட்டுச்சிறையில் இருப்பார் என சிவாஜி கணேசன் தீர்ப்பு வழங்கிவிடுவார். பின்னர், சிவாஜி கணேசனும், சத்யராஜும் நல்ல நண்பர்களாய் பழகி, இருவரும் இணைந்து குற்றவாளிகளை எப்படி பழிவாங்கப்போகிறார்கள் என்பதே மீதி கதை.

சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோர் மிகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இத்திரைப்படம் சத்யராஜிற்கு மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாகவும் அமைந்தது. இந்நிலையில், “ஜல்லிக்கட்டு” திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன், இத்திரைப்படத்தை மீண்டும் தயாரிக்கவுள்ளதாக ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.

இதில் சிவாஜி கணேசன் நடித்த கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும், சத்யராஜ் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க இன்னும் எந்த நடிகரையும் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும் கூறியிருக்கிறார். இத்திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் சித்ரா லட்சுமணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.