நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு.. முடிவுக்கு வந்த ரச்சிதா – தினேஷ் விவகாரம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.

இதற்கு பிறகு பிக் பாஸ் போனதால் அவர் சந்தித்த சிக்கல்கள் தான் அதிகம். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தற்போது ரக்‌ஷிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில செய்திகள் வெளியானது. இதனிடையே, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, கணவருடன் ஒன்று சேர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டதாக சீரியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தினேஷ் விவகாரத்து செய்வதற்காக முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ரக்சிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் மும்பை நீதிமன்றம் பெண்கள் பற்றி தீர்ப்பொன்றை வெளியிட்டிருந்தது, அந்த தீர்ப்பானது தனியாக வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

இந்தப் பதிவை பகிர்ந்த ரக்சிதா அதில் இது போதும் இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பதிவிட்டிருந்தார். பிக்பாஸ் ரக்சிதாவிற்கு குழந்தை பற்றி பெரிய ஏக்கம் ஒன்று இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் கணவர் தினேஷ் உடன் இணைந்து வாழ்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில் ரக்சிதா இந்தப் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

Poorni

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

7 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

7 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

8 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

8 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

9 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

9 hours ago

This website uses cookies.