தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராக இருந்து வந்தவர் தான் ரகுவரன் இவர் பல்வேறு திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் வேடம் ஏற்றும் அடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்தார்.
முதன் முதலில் ஹீரோவாக திரைப்படங்களின் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு எதிர் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். ஹீரோவாக நடித்ததை காட்டிலும் வில்லன் வேடம் இவருக்கு பக்காவாக பொருந்த ஆரம்பிக்க பின்னாளில் அவர் வில்லன் நடிகராகவே மாறிவிட்டார் .
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது வில்லத்தனமான நடிப்பு எல்லோருது கவனத்தையும் கவர்ந்தது .
இந்த நிலையில் பிரபலமான நடிகராக நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.
இதனிடையே ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார். இந்த நிலையில் ரகுவரன் பல வருடங்களுக்கு முன் தான் உயிரோடு இருக்கும்போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில் நடிகர் ரகுவரனிடம் நீங்க வாழ்க்கையில் பண்ண மிகப்பெரிய தப்பு அப்படி என்றால் எது நினைக்கிறீங்க? என கேள்வி எழுப்பியதற்கு… நான் நடிகன் ஆனது தான் மிகப்பெரிய தவறு என கூறினார். என்ன காரணம் என கேள்வி எழுப்பியதற்கு ஏன்னா இதைவிட நல்ல சந்தோஷமா ஒரு சின்ன வீடு கட்டிக்கிட்டு… ஒரு நிலத்தில் பயிரிட்டு…. …
விளையிற பயிறு முதுகுல சுமந்துட்டு போய் மார்க்கெட்ல போட்டு. அதன் மூலம் கிடைக்கிற சாப்பாட்டுல கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு நிம்மதியா படுத்து துங்கி ஆண்டவனே இன்னைக்கு மழை வரணும் என வேண்டிக் கொண்டு ஆடு மாடு கோழி இது எல்லாத்தையும் வச்சு வளர்த்துட்டு அதுங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு நமக்கு உதவிக்குனு ஒருத்தர் இருந்தா அந்த வாழ்க்கையே வேற தான் .
இதையும் படியுங்கள்: யாரை கேட்டு நீ இங்க வந்த…? பிக்பாஸ் 8 ல் மகள் – கடிந்து கொண்ட விஜய் சேதுபதி – வைரல் வீடியோ!
வாழ்க்கை நம்ம வாழ்வதெல்லாம் வாழ்க்கையே கிடையாது என வாழ்க்கை பற்றிய தெளிவான புரிதலை ரகுவரன் அந்த பேட்டியில் பேசியிருப்பார். இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாக மனுஷன் எவ்வளவு வேதனைப்பட்டு இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியோடு வாழ நினைத்திருந்தால் இவ்வளவு. வருத்தத்தோடு ஆதங்கப்பட்டு பேசி இருப்பார் என ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.