கும்கி, மைனா முதலான படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ உருவாகியுள்ளது. இதில் கோவை சரளா, தம்பி ராமையா, அஷ்வின் குமார், கு.ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை வெளியாகும் செம்பி திரைப்படத்தின் செய்தியாளர்கள் காட்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை இணையதள செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திரைப்படம் மூன்று இளைஞர்களால் பாலியல் வன்புறவு செய்யப்படும் 10 வயது சிறுமியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது.
அதிகாரம் அந்த சிறுமிக்கு எதிராக செயல்படும் நிலையில், சாதாரண ஒரு நபர் நியாயம் பெற்றுதருகிறார் என்ற வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முடிவில் அன்பு குறித்து பைபிளில் இடம்பெறும் ஒரு வாசகத்தை பிரபு சாலமன் பதிவிட்டுள்ளார். அதில், உன்னிடத்தில் செலுத்தும் அன்பை பிறரிடத்தில் செலுத்து – இயேசு.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் அவர் படம் குறித்தும் படம் உருவாக்குதல் குறித்தும் பேசினார். அப்போது சில செய்தியாளர்கள் செம்பி கிருஸ்துவ மதப் பிரச்சாரத்தை வலியுறுத்தும் படமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பிரபு சாலமன் இது நான் கடைப்பிடிக்கும் விஷயம் என்று தெரிவித்தார். மேலும் கிருஸ்துவம் மதமே கிடையாது என்றும் கூறினார். அவரிடம் மீண்டும் ஒரு செய்தியாளர் உங்கள் படங்கள் தொடர்ந்து கிருஸ்துவ மதப் பிரச்சாரம் போல் உள்ளதே என கேள்வி எழுப்பிபார்.
அதற்கு மீண்டும் சொல்கிறேன், கிருஸ்துவம் மதம் கிடையாது. உங்களை காயப்படுத்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்க தேவை இல்லை என அந்த செய்தியாளர்கள் கூறினர்.
இந்த சமயத்தில் செய்தியாளர்கள் மற்றும் பிரபு சாலமன் ஆகியோருக்கு கருத்தியல் ரீதியாக வாக்குவாதம் நடைபெற்றது. பிரபு சாலமன் தொடர்ந்து இது என்னுடைய கருத்து என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.