தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடிப்பில் மிரட்டி இருப்பார். இந்த படம் அவருக்கு நடிகராக நல்ல பெயரை பெற்று தந்தது.
இதேபோன்று விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் மோகன். ஜி இயக்கத்தில் தற்போது ‘பகாசுரன்’ என்ற படத்தில் செல்வராகவன் நடித்து தற்போது திரைக்கு வந்துள்ளது.
இயக்குநராக கலக்கிய செல்வராகவன் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். செல்வராகவனுக்கு திரையில் எப்படி ரசிகர்கள் உண்டோ அதேபோல் அவரின் தத்துவ ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திடீரென வந்து தத்துவத்தை தூவிவிட்டு சென்றுவிடுவார்.
இந்நிலையில், நடிகராக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் செல்வராகவன் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் எந்த படத்தை இயக்க போகிறார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில், செல்வராகவனிடம் தொகுப்பாளர், ‘உங்கள் படத்தை தனுஷின் மகன்கள் விமர்சனம் செய்வார்களா?’ என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த செல்வராகவன், ” தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா இரண்டு பேரும் தான் உண்மையான விமர்சகர்கள் என்றும், அவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் திரைப்படம் மோசமாக இருக்கிறது என்று வெளிப்படையாக தெரிவித்து விடுவார்கள். சில சமயங்களில் தன் படத்தை பார்த்து காரித் துப்புவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.