சினிமா / TV

அட்டகத்தியா? கெத்தா? இனிமேல் இப்படி கூப்பிடுங்க தினேஷே சொல்லிட்டார்!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் அட்டகத்தி தினேஷ். இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடக்க கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த ஈ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமான தினேஷ் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஆடுகளம் திரைப்படம் மற்றும் மௌனகுரு உள்ளிட்ட திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடித்த அட்டகத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அட்டகத்தி தினேஷ் என்றே அடையாளம் பெயராக அழைக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அதன்படி பண்ணையாரும் பத்மினியும் , திருடன் போலீஸ் , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், விசாரணை, ஒரு நாள் கூத்து ,கபாளி, களவாணி, மாப்பிள்ளை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அண்மையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்..

உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை வடபழனியில் அமைந்துள்ள சிம்ஸ் உயர் மருத்துவமனையில், ‘சிம்ஸ் வாக் 4 ஹார்ட்’ என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட பெருநடை நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் தினேஷ் கலந்துகொண்டார்.

அந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அட்டகத்தி தினேஷிடம் பத்திரிகையாளர்கள் இனிமேல் நீங்க அட்டகத்தி தினேஷா? இல்ல கெத்து தினேஷா? என கேள்வி கேட்டதற்கு… மக்கள் கூப்பிடுறது தான். அவங்க மனசார விருப்பப்பட்டு ஆசையா எதை கூப்பிடுகிறார்களோ அதுவாவே நான் இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்: குட் நியூஸ்…. எமோஷ்னல் ஆன கன்னிகா – சந்தோஷத்தில் குதித்த சினேகன் – குவியும் வாழ்த்துக்கள்!

ஆனால், எனக்கு தினேஷ் என்ற பெயரே போதும். அட்டகத்தியும் கெத்து தான்…. கெத்தும் கெத்து தான் என பதிலளித்தார். இப்படி ஒரு அன்பை நீங்கள் எதிர்பார்த்தது உண்டா என கேள்வி எழுப்பியதற்கு ஆம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்தேன். ஆனால், இப்பதான் எனக்கு கிடைச்சிருக்கு என தினேஷ் பதில் அளித்திருந்தார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.