தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் அட்டகத்தி தினேஷ். இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடக்க கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த ஈ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமான தினேஷ் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஆடுகளம் திரைப்படம் மற்றும் மௌனகுரு உள்ளிட்ட திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடித்த அட்டகத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அட்டகத்தி தினேஷ் என்றே அடையாளம் பெயராக அழைக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
அதன்படி பண்ணையாரும் பத்மினியும் , திருடன் போலீஸ் , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், விசாரணை, ஒரு நாள் கூத்து ,கபாளி, களவாணி, மாப்பிள்ளை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் அண்மையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்..
உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை வடபழனியில் அமைந்துள்ள சிம்ஸ் உயர் மருத்துவமனையில், ‘சிம்ஸ் வாக் 4 ஹார்ட்’ என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட பெருநடை நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் தினேஷ் கலந்துகொண்டார்.
அந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அட்டகத்தி தினேஷிடம் பத்திரிகையாளர்கள் இனிமேல் நீங்க அட்டகத்தி தினேஷா? இல்ல கெத்து தினேஷா? என கேள்வி கேட்டதற்கு… மக்கள் கூப்பிடுறது தான். அவங்க மனசார விருப்பப்பட்டு ஆசையா எதை கூப்பிடுகிறார்களோ அதுவாவே நான் இருக்கிறேன்.
இதையும் படியுங்கள்: குட் நியூஸ்…. எமோஷ்னல் ஆன கன்னிகா – சந்தோஷத்தில் குதித்த சினேகன் – குவியும் வாழ்த்துக்கள்!
ஆனால், எனக்கு தினேஷ் என்ற பெயரே போதும். அட்டகத்தியும் கெத்து தான்…. கெத்தும் கெத்து தான் என பதிலளித்தார். இப்படி ஒரு அன்பை நீங்கள் எதிர்பார்த்தது உண்டா என கேள்வி எழுப்பியதற்கு ஆம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்தேன். ஆனால், இப்பதான் எனக்கு கிடைச்சிருக்கு என தினேஷ் பதில் அளித்திருந்தார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.