தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். வித்தியாசமான கதைக்களத்துடன் இவர் இயக்கத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெறுவது வழக்கம்.
இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்து, தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை.
இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், ரைட்டர் உள்ளிட்ட பல திறமைகளை கொண்டுள்ளவர். தனுஷ், மஞ்சு வாரியார் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்பட கதை மட்டுமல்லாமல், இப்படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற எள்ளுவய பூக்களையே பாடல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடியதை கேட்டு தான் அப்பாடல் பயன்படுத்தப்பட்டாக தகவல் வெளியானது.
இதனை பேட்டியொன்றில் பகிர்ந்த சீமான், அந்தப் பாடலை பாடியும் காட்டினார். சீமான் பொய் கூறுவதாக ஒரு சிலர் சர்ச்சையாக்கினர். இது குறித்து பேட்டியொன்றில் வெற்றிமாறனிடம் கேட்டபோது, அசுரன் படத்தில் பாடல்கள் குறித்து நானும் ஜி.வி.பிரகாஷும் பேசியபோது நாட்டுப்புற பாடல்கள் வடிவில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
அப்போது, ஒரு கல்லூரி விழாவில் சீமான் பாடிய பாடலை கேட்டேன். அந்தப் பாடலை உடனே ஜி.வி.பிரகாஷிடம் கேட்க சொன்னேன். அவருக்கும் அது பிடித்துப்போகவே, நானும் ஜி.வி.பிரகாஷும் சீமானை சந்தித்து இது குறித்து பேசினோம். அவர் தன் பாட்டி பாடிய பாடல்தான் என்று சொல்லவே, பின்னர் சீமான் பாடிய டியூன் வைத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் அந்தப் பாடலை உருவாக்கினார் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.