2023 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மகாநதி 4 தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் அழகான குடும்பக் கதையாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.
தற்போது, காவிரி,விஜய், நிவின் இவர்களின் காதல் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரப்போகிறது என்பதுதான் இந்த சீரியல் ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. நிவின் இன்றைய எபிசோட்டில் விஜய் தன்னிடம் கூறிய விஷயத்தை காவிரியிடம் தெரிவித்து விடுகிறார்.
இதனை கேட்டு ஷாக் ஆகும் காவேரி இந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என நிவினிடம் கட்டன் ரைட்டாக கூறிவிட்டு சென்று விடுகிறார். இந்நிலையில், இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்து கங்கா கதாபாத்திரத்தில் பிரதீபா என்பவர் நடித்து வந்தார். ஆனால், அவர் சில காரணங்களால் வெளியேறிய நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனியாக நடித்து வந்த திவ்யா கணேஷ் மகாநதி சீரியலில் கங்காவாக நடிக்க கமிட்டாகி நடித்து வந்தார்.
இப்போதுதான் கங்கா குமரன் காட்சிகள் கொஞ்சம் ரீச் ஆனது. அதற்குள் மகாநதி தொடரிலிருந்து, திவ்யா கணேஷ் விலகுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதாவது, அவர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், தான் மகாநதி தொடரில் நடிக்க முடியாமல் போகிறது எனது கதாபாத்திரத்திற்காக வேறொரு நடிகை அவர்கள் தேட வேண்டும் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.