வினியோகஸ்தராக திரையுலகில் அடியெடுத்து வைத்த தயாரிப்பாளராக மாறி பின்னர் நடிகராக பட்டைய கிளப்பியவர் நடிகர் ராஜ்கிரண். ராமராஜனை வைத்து சில படங்களை தயாரித்த இவர், ராமராஜனை வைத்து தயாரிக்க நினைத்த திரைப்படம் ‘ராசாவின் மனசிலே’. இப்படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கினார். இதுதான் கஸ்தூரி ராஜாவுக்கு முதல் திரைப்படம். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ராஜ்கிரண்.
சில பல காரணங்களால் ராமராஜன் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக ராஜ்கிரணே நடித்தார். இப்படத்தின் வெற்றி அவரை நடிகராகவே மாற்றிவிட்டது. அதன்பின் பல ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். தன் அப்பாவுக்கு முதல் வாய்ப்பு கொடுத்த காரணத்தினால் தனுஷுக்கு ராஜ்கிரண் மீது எப்போதும் நல்ல மரியாதை உண்டு.
எனவே, அவர் முதன்முதலாக இயக்கிய ‘பவர் பாண்டி’ திரைப்படத்தில் ராஜ்கிரணையே கதாநாயகனாக நடிக்க வைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது ராஜ்கிரணை மிக அன்பாக தனுஷ் கவனித்துக்கொண்டதாக தகவல் வெளியானது. இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் ராஜ்கிரண் பேசியபோது, “இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்றது. ஒரு காட்சிக்கு பின் அடுத்த காட்சிக்கு இடையே ஓய்வு கூட கொடுக்காமல் என்னை அழைத்து நடிக்க வைத்தனர்.
ஒரு காட்சி முடிந்து நான் சிகரெட்டை பற்றவைத்த உடனே அடுத்த காட்சியில் நடிக்க அழைப்பார்கள். எனவே, சிகரெட்டை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடுவேன். இதைப்பார்த்து கோபப்பட்ட தனுஷ், ‘ஐயா’வ சிகரெட் கூட பிடிக்க விட மாட்டீங்களா?’ என படக்குழுவினரை திட்டினார். அதேபோல், ஒரு அறையில் படப்பிடிப்பு நடந்த போது, எதிர்பாராமல் படக்குழுவினர் ஒருவர் என்னை மோதியதைப்பார்த்து கோபமடைந்த தனுஷ் அவரை அடிக்க பாய்ந்தார்” என ராஜ்கிரண் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.