பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போய் இருப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை அபிராமபுரத்தில் உள்ள பாடகர் விஜய் யேசுதாசின் வீட்டில் 60 சவரன் தங்க நகை திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதில் கடந்த டிசம்பர் மாதமே நகை திருட்டு நடந்துள்ளது. பிப்ரவரி இறுதியில்தான் இது தெரியவந்துள்ளது; வீட்டு பணியாளர்கள் திருடியிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து விசாரணை இறங்கிய போலீசார் நகைகளை திருமணத்தில் மனைவி தர்ஷாவின் குடும்பத்தினர் அளித்தவை என்று கண்டறிந்துள்ளனர். மேலும் லாக்கரை ரகசிய குறியீடு மற்றும் ரகசிய எண்கள் தெரிந்தால் மட்டுமே திறக்க முடியும் என்றும், அப்படி கணவன் மற்றும் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசிய எண் தெரியும் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, சம்பவம் குறித்து துபாயில் இருக்கும் விஜய் ஏசுதாஸுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரை பலமுறை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்தும் பதில் அளிக்காமலும், சென்னைக்கு வராமலும் இருந்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர்களின் வீட்டில் வேலை பார்க்கும் 11 நபர்களிடம் விசாரணை நடத்தியதில் வேலைக்காரர்கள் யாரும் நகையை திருடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனிடையே புகார் அளித்த விஜய் ஏசுதாஸின் மனைவியின் மீது சந்தேகம் எழுந்து போலீசார் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனாவை விசாரித்து வருகிறார்கள். மேலும் டிசம்பர் மாதம் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நதிகள் பிப்ரவரி 30ஆம் தேதி புகார் அளிக்க என்ன காரணம் என்றும் கணவர் மனைவி கிடையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் நாடகமாடுகிறார் என்று சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளதால் அவரை விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ள செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.