60 சவரன் நகை திருடு போன சம்பவம்.. பிரபலத்தின் மனைவி நடத்திய நாடகம் அம்பலம்..!

Author: Vignesh
13 June 2023, 4:25 pm
dhanush - updatenews360
Quick Share

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போய் இருப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை அபிராமபுரத்தில் உள்ள பாடகர் விஜய் யேசுதாசின் வீட்டில் 60 சவரன் தங்க நகை திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Vijay-Yesudas-updatenews360

அதில் கடந்த டிசம்பர் மாதமே நகை திருட்டு நடந்துள்ளது. பிப்ரவரி இறுதியில்தான் இது தெரியவந்துள்ளது; வீட்டு பணியாளர்கள் திருடியிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து விசாரணை இறங்கிய போலீசார் நகைகளை திருமணத்தில் மனைவி தர்ஷாவின் குடும்பத்தினர் அளித்தவை என்று கண்டறிந்துள்ளனர். மேலும் லாக்கரை ரகசிய குறியீடு மற்றும் ரகசிய எண்கள் தெரிந்தால் மட்டுமே திறக்க முடியும் என்றும், அப்படி கணவன் மற்றும் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசிய எண் தெரியும் என்பது தெரியவந்துள்ளது.

vijay yesudas-updatenews360

இதனிடையே, சம்பவம் குறித்து துபாயில் இருக்கும் விஜய் ஏசுதாஸுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரை பலமுறை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்தும் பதில் அளிக்காமலும், சென்னைக்கு வராமலும் இருந்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர்களின் வீட்டில் வேலை பார்க்கும் 11 நபர்களிடம் விசாரணை நடத்தியதில் வேலைக்காரர்கள் யாரும் நகையை திருடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

vijay yesudas-updatenews360

இதனிடையே புகார் அளித்த விஜய் ஏசுதாஸின் மனைவியின் மீது சந்தேகம் எழுந்து போலீசார் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனாவை விசாரித்து வருகிறார்கள். மேலும் டிசம்பர் மாதம் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நதிகள் பிப்ரவரி 30ஆம் தேதி புகார் அளிக்க என்ன காரணம் என்றும் கணவர் மனைவி கிடையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் நாடகமாடுகிறார் என்று சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளதால் அவரை விசாரணை செய்து வருகிறார்கள்.

vijay yesudas-updatenews360

மேலும் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ள செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது

Views: - 229

0

0