தமிழ் திரைப்பட நடிகரான விக்ராந்த் குழந்தை நட்சத்திரமாக 1991ம் ஆண்டு நடித்து அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து நெஞ்சத்தைக் கிள்ளாதே, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, சட்டப்படி குற்றம், பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களில் முக்கிய நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களை, நடித்தாலும் அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வருகிறார். இவர் தளபதி விஜய்யின் உறவுக்கார தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், எந்த ஒரு இடத்திலும் விஜய்யின் பெயரை பயன்படுத்தாமல் தனது சொந்த முயற்சியின் மூலமாகவே முன்னேறவேண்டும் என முயற்சித்து வருகிறார். தற்ப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அண்ணன் விஜய் குறித்தும், அவரால் பல படவாய்ப்புகள் தவறவிட்டதை குறித்து கூறியுள்ளார். அதாவது தன்னை தேடி வரும் தயாரிப்பாளர் பெரும்பாலானோர் தான் விஜய்யின் தம்பி என்பதால் அவரை வைத்து படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என கேட்பார்கள். எப்படியென்றால், விஜய் என் படத்தின் ஒரு நடனம் ஆடவேண்டும், படத்தின் ப்ரோமோஷன்களுக்கு அவர் வரச்சொல்லுங்க என்றெல்லாம் கூறுவார்கள்.
நான் அவரை சார்ந்து வாய்ப்புகள் பெற கூடாது என்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்து விடுவேன். இதனால் நான் பல நல்ல நல்ல படவாய்ப்புகள் தவறவிட்டுள்ளேன் என விக்ராந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.