எந்த ஆபாச மெசேஜும் இல்லயேமா…? ட்ராமா ஆடிய ரக்ஷிதா – பிரச்சனைக்கு முடிவு கட்டிய போலீஸ்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே நேற்று ரட்சிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தான் தினேசை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் இன்று தினேசை விசாரணைக்கு அழைத்த நிலையில், போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரட்சிதாவிற்கு வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்றார். இந்த புகார் தொடர்பாக ரட்சிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக சின்னத்திரை நடிகை ரட்சிதா அளித்த புகாரால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்….

இது குறித்து தினேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, எங்களது இருவரின் போனையும் வாங்கி போலீசார் விசாரித்தார்கள். அப்போது நீ சொன்னது போன்று எந்த ஆபாச மெசேஜும் , மிரட்டலும் இல்லையேமா என அவர்களே கேட்டார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்று சாதாரணமாக கேஸ் போட்டால் எந்த கேசும் எடுபடாது. அதனால் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள், ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்கள், மிரட்டல் விடுகிறார்கள் இப்படி ஏதேனும் போட்டால் தான் கேஸ் சீக்கிரமாக எடுப்பாங்க என ரக்ஷிதாவுக்கு அவரது வழக்கறிஞ்சர் சொல்லியிருக்கிறார் அதை அவர் அப்படி செய்துவிட்டார்.

இத்தனை நாள் அவருடன் என்றாவது பழையபடி வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால். அதெல்லாம் நேற்று அவர் சொன்ன அந்த மூன்று வார்த்தைகளில் முடிந்துவிட்டது. அதாவது நான் பணத்தை கேட்டேன், ஆபாசமாக பேசினேன், மிரட்டினேன் இதெல்லாம் முற்றிலும் போய். இவ்வளவு நடந்தப்பிறகும் எனக்கு அவருடன் வாழவே விருப்பம் இல்லை அவர் விவகாரத்து செய்துக்கொள்ளலாம் நான் தரலாமா கையெழுத்து போட்டு தருகிறேன் என கோபமாக ரக்ஷிதா உடனான உறவை முறித்துக்கொண்டார் தினேஷ்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.