7ஜி ரெய்ன்போ காலணி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, துள்ளுவதோ இளமை போன்ற வெற்றிப்படங்களை கொண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக கொடிக்கட்டி வருபவர் இயக்குனர் செல்வராகவன்.
செல்வராகவன் தன் இயக்கத்தில் தம்பி நடிகர் தனுஷை அறிமுகப்படுத்தி உச்சமடையச்செய்தவர். நானே வருவேன் படத்தின் மூலம் 11 வருடம் கழித்து தனுஷுடன் இணைந்து படத்தினை எடுத்து வெளியிட்டார்.
நானே வருவேன் படம் 29-ஆம் தேதி செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக வெளியானது. படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் பொன்னியின் செல்வன் படத்தினால் வசூலில் அடிவாங்கியது.
இந்நிலையில், மூத்த தயாரிப்பாளராக திகழ்ந்து வரும் கே.ராஜன் முன்னதாக கமல் ஹாசனை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியும் முன்னணி நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
மேலும், தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தினை பல மேடைகளில் பேசி வந்த கே ராஜன், ஒரு நிகழ்ச்சியில் செல்வராகவனை கேவலப்படுத்தி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது:- செல்வராகவன் பல தயாரிப்பாளர் வாழ்க்கையை காலி செய்தவன் என்றும், நல்ல நேரத்தில் எந்த பேரை சொல்ற என்றும் ஆயிரத்தில் ஒருவன் பட தயாரிப்பாளரை காலி செய்தவன் செல்வராகவன் என்று பேசியிருந்தார்.
மேலும் பல குடும்பத்தை பல இயக்குனர்கள் வாழ்க்கையை காலி செய்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.