‘அவன் பல பேரை காலி செய்திருக்கிறான்’- தனுஷ் பட இயக்குனரை தர லோக்கலாக பேசிய தயாரிப்பாளர்..!

Author: Vignesh
16 October 2022, 4:00 pm
dhanush -upatenews360-1
Quick Share

7ஜி ரெய்ன்போ காலணி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, துள்ளுவதோ இளமை போன்ற வெற்றிப்படங்களை கொண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக கொடிக்கட்டி வருபவர் இயக்குனர் செல்வராகவன்.

செல்வராகவன் தன் இயக்கத்தில் தம்பி நடிகர் தனுஷை அறிமுகப்படுத்தி உச்சமடையச்செய்தவர். நானே வருவேன் படத்தின் மூலம் 11 வருடம் கழித்து தனுஷுடன் இணைந்து படத்தினை எடுத்து வெளியிட்டார்.

நானே வருவேன் படம் 29-ஆம் தேதி செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக வெளியானது. படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் பொன்னியின் செல்வன் படத்தினால் வசூலில் அடிவாங்கியது.

Naane-Varuven-updatenews360 1.jpg 2

இந்நிலையில், மூத்த தயாரிப்பாளராக திகழ்ந்து வரும் கே.ராஜன் முன்னதாக கமல் ஹாசனை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியும் முன்னணி நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும், தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தினை பல மேடைகளில் பேசி வந்த கே ராஜன், ஒரு நிகழ்ச்சியில் செல்வராகவனை கேவலப்படுத்தி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

k rajan_updatenews360

அதில் அவர் பேசியதாவது:- செல்வராகவன் பல தயாரிப்பாளர் வாழ்க்கையை காலி செய்தவன் என்றும், நல்ல நேரத்தில் எந்த பேரை சொல்ற என்றும் ஆயிரத்தில் ஒருவன் பட தயாரிப்பாளரை காலி செய்தவன் செல்வராகவன் என்று பேசியிருந்தார்.

மேலும் பல குடும்பத்தை பல இயக்குனர்கள் வாழ்க்கையை காலி செய்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

selvaraghavan-updatenews360 (1)
Views: - 441

0

0