40 வயதில் விஜய் டிவி சீரியல் நடிகை தாயாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்யாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அதில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியலில் ஒன்று காதலிக்க நேரமில்லை. இந்த தொடர் 2007 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் பிரஜின், சந்திரா, ஸ்ரீநாத், அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் நரேன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த சீரியல் இளைனர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது.
மேலும், இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை சந்திரா லக்ஷ்மண். இவர் மலையாள நடிகை ஆவார். இருந்தாலும், காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல சீரியல்களில் நடித்திருந்தார். அதிலும், இவர் கோலங்கள், மகள், சொந்த பந்தம், பாசமலர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான மனசெல்லாம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் மலையாளம், தமிழ் என பிறமொழி படங்களிலும், தொடர்களிலும் நடித்து இருந்தார். பிறகு தமிழில் வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை என்றவுடன் இவர் மலையாள தொடரில் கவனம் செலுத்தி வந்தார்.
மேலும், சந்திரா அவர்கள் மலையாளத்தில் ஸ்வந்தம் சுஜாதா என்ற சீரியலில் நடித்த நடிகர் டோஷூ என்பவரை காதலித்தார். இதனை அடுத்து சந்திரா அவர்கள் தன்னுடைய 38 வயதில் நடிகர் டோஷூவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்புதான் சந்திரா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இதற்கு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் சந்திராவிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சந்திரா- டோஷூ கிறிஸ்டி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை கையில் பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை சந்திரா தன்னுடைய இன்ஸ்ட்டாவில் பகிர்ந்து, கடவுளுக்கு நன்றி! எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். இவரின் பதிவை பார்த்து ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.