புற்றுநோய் பாதிப்பு; மரணமடைந்த பிரபல டிவி தொகுப்பாளினி நடிகை,.வருத்தத்தில் திரையுலகம்,..

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருந்தவர் அபர்ணா.இவருக்கு வயது 51.நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அபர்ணா அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.


1984 ஆம் ஆண்டு வெளியான மஸ்ண்டா ஹுவு படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகம் ஆன அபர்ணா, அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

ஷிவா ரஜ்குமாரின் இன்ஸ்பெக்டர் விக்ரம் படத்திலும் அபர்ணாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.அபர்ணாவின் மரணம் கன்னட பொழுதுபோக்கு துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவரது ரசிகர்களும் சக நடிகர் – நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


இந்த தகவலை அவரது கணவர் நாகராஜ் வஸ்த்ரே உறுதிபடுத்தியுள்ளார். அபர்ணாவிற்கு 4-வது ஸ்டேஜ் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருந்ததாகவும் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்து விட்டதாகவும் நாகராஜ் வஸ்த்ரே கூறியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.