கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருந்தவர் அபர்ணா.இவருக்கு வயது 51.நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அபர்ணா அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு வெளியான மஸ்ண்டா ஹுவு படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகம் ஆன அபர்ணா, அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
ஷிவா ரஜ்குமாரின் இன்ஸ்பெக்டர் விக்ரம் படத்திலும் அபர்ணாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.அபர்ணாவின் மரணம் கன்னட பொழுதுபோக்கு துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவரது ரசிகர்களும் சக நடிகர் – நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த தகவலை அவரது கணவர் நாகராஜ் வஸ்த்ரே உறுதிபடுத்தியுள்ளார். அபர்ணாவிற்கு 4-வது ஸ்டேஜ் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருந்ததாகவும் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்து விட்டதாகவும் நாகராஜ் வஸ்த்ரே கூறியுள்ளார்.
ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.