தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத காமெடி நடிகராக மக்கள் மனதில் ஒரு ஆழமான இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு. ஒரு நேரத்தில் இவர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எந்த ஹீரோக்களின் படங்கள் வெளியானாலும் அதில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் கட்டாயம் இடம் பெற்று விடும்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் நடிகை வடிவேலு குறித்து அடுக்கடுக்கான பல புகார்கள் இருந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக முன்பணத்தை வாங்கிவிட்டு நடிக்க வராமல் இருப்பது. கொடுத்த நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடிப்பது, தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளை இழிவு படுத்துவது, யாரையும் வளர விடாமல் தடுப்பது இப்படி பல குற்றச்சாட்டுகள் வடிவேலுவின் மீது அடுக்கடுக்காக இருந்து கொண்டு தான் வருகிறது.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல காமெடி நடிகர் ஆன சுவாமிநாதன் வடிவேலு குறித்து பேசி இருக்கும் விஷயம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. வடிவேலு ரொம்ப கொடூரமானவர். காமெடி நடிகர்களாக அவருடன் நடிக்கும் சில நடிகர்கள் நடிக்கவே கூடாது என்று தடுப்பார் என்னையும் அப்படித்தான் தடுத்திருக்காரு.
ஆனால் நான் செந்தில் விவேக் சூரி இவங்க கூட நடிக்கும்போது அவர்களுக்கு அந்த எண்ணமே இருந்தது கிடையாது. அடுத்தவங்களும் வளரட்டும் என்று தான் நினைப்பாங்க. ஆனால், இதில் வடிவேலு தான் மிகவும் மோசமானவர் என நடிகர் சுவாமிநாதன் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.