நடிகர் ஆகவேண்டும் என்கிற ஆசையோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து, தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. பிரபல இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி உள்ளிட்டோருக்கு அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய இவர், வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்தது.
அதன் பின்னர், குஷி திரைப்படம் இவருக்கு பெரும் ஹிட் அடித்தது. இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்த இவர், நடிகராக அவதாரம் எடுத்தார். அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, நியூ, இசை என பல திரைப்படங்களில் நடித்த போதிலும், இவருக்கு ஏதும் வெற்றி திரைப்படமாக அமையவில்லை.
ஹீரோவாக கொண்டாடப்படாத இவர், இப்போது வில்லனாக நடித்து அமோக ஆதரவை பெற்று வருகிறார். இதனால் எஸ்ஜே சூர்யாவுக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. ஸ்பைடர் திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கத் தொடங்கிய இவர், மெர்சல், மாநாடு, டான் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
தற்போது இருக்கும் டாப் நடிகர்களின் படங்களில் யார் வில்லனாக நடிக்க வேண்டும் என யோசித்தால், முதலில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் நினைவுக்கு வரும் பெயர் எஸ்ஜே சூர்யாதான். அந்த அளவிற்கு இவருடைய மவுசு கூடிவிட்டது.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.