நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக அக்டோபர் 9ம் தேதி அறிவித்தார் விக்னேஷ் சிவன். வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆன விவகாரம் குறித்து விசாரணை நடத்த தனிக் குழுவை அமைத்தது தமிழக அரசு.
வாடகைத் தாய்
வாடகைத் தாய் மூலம் பிள்ளைகள் பெற்றதால் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அரசிடம் தெரிவித்துள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். துபாயில் இருக்கும் உறவினர் தான் வாடகைத் தாயாக இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.
சட்டம்
வாடகைத் தாய் தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்தோம் என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அரசிடம் தெரிவித்துள்ளனர். கமர்ஷியல் முறையில் வாடகைத் தாயை அமர்த்துவதை தடை செய்து வந்த சட்டம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. அது அமலுக்கு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நயன்தாரா வாடகைத் தாய்க்காக பதிவு செய்திருக்கிறார்.
விளாசல்
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் மூலம் பிள்ளை பெற்றுக் கொண்டது தொடர்பாக பலரும் அவர்களை சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். இந்நிலையில் நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க நயன்தாரா விவகாரம் ரொம்ப முக்கியமா என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.