அஞ்சலி செலுத்த வந்த இடத்திலும் அயலான் Promotion’னா? சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

கருப்பு வைரமாக திரைத்துறையில் முத்தான பல வசனங்கள் பேசி, உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நடுத்தரவர்க்கத்தினர் முதல் மேலாதிக்க மக்கள் வரை அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்து சாதித்தவர் விஜயகாந்த். இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதிக்க 2005ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார். இதனையடுத்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது தேமுதிக. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து தனது அரசியல் பேச்சால் மக்களை வெகுவாக கவர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் பெற்று காலம் காலமாக ஆட்சியை பிடித்துக்கொண்டிருந்த பெரிய அரசியல்வாதிகளுக்கே ஆட்டம் கொடுத்தார் கேப்டன். தொடர்ந்து அரசியலில் கொடிகட்டி பறந்த விஜயகாந்த் மிகவும் நேர்மையான தனது கருத்துக்களை ஆதங்கத்தோடும் , கோபத்தோடும் முன்வைத்து பெரிய அரசியல் புள்ளிகளின் வெறுப்பையும், சதிகளை சம்பாதித்து வளர்ந்த வேகத்தில் அரசியலில் சறுக்கலை சந்தித்துவிட்டார். அதன் பின்னர் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக சிகிட்சையிலே சில நாட்கள் ஓடியது.

பின்னர் சிகிச்சை பலனின்றி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். விஜயகாந்தின் மரணம் சரித்திரம் பேசும்படியாக கோடிக்கணக்கான மக்களின் அலைமோதிய கூட்டத்திற்கு மத்தியில் அடைக்கலம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

மேலும், அவரது நினைவிடத்தில் பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் , மக்கள் என தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக, சிலர் என்ன அயலான் படத்திற்கு ப்ரமோஷன் பண்ண இங்கயும் வந்திட்டீங்களா? உலகமகா நடிப்புடா சாமி என சிவகார்த்திகேயனை விமர்சித்து தள்ளியுள்ளனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.