நடிகர் கிஷோர் பசங்க படத்தில் நடித்து ஃபேமஸானவர், இவர் தான் காதலித்து வரும் நடிகை ப்ரீத்தி குறித்தும் அவர்கள் திருமணம் குறித்தும், முக்கியமான தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில், வெளியான முக்கியமான படங்களில் ஒன்று பசங்க. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கிஷோர் நடித்து அசத்தியவர். இதற்குப் பின் கோலி சோடா உள்ளிட்ட படங்களில் கலக்கி வந்த நடிகர் கிஷோர், பிரபல சீரியல் நடிகை பிரீத்தி என்பவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்தது பெரும் வைரலானது.
இந்த நிலையில் இவர்கள் இருவர் குறித்த, முக்கியமான தகவல்களை பேட்டியில் நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார். அதாவது, இருவரும் சந்தித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும், அதன் நினைவாகத்தான் அந்த போட்டோக்களை வெளியிட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், அவர் தன்னை விட நடிகை ப்ரீத்தி 4 வயது மூத்தவர் என்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இரு வீட்டாருக்கும் அது பிரச்சனை இல்லை எனவும் குறிப்பிட்டார்.
ஒரே ஒரு முக்கியமான விஷயத்திற்காக வெயிட் செய்வதாகவும், அது நடந்து முடிந்ததும் இருவரும் திருமணம் குறித்து அறிவிப்பை நிச்சயமாக வெளியிடுவோம் என்றும் ஓபனாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
This website uses cookies.