கேப்டன் உருவத்தை பயன்படுத்தாதீங்க.. கோட் படத்திற்கு சிக்கலை உண்டாக்கிய பிரேமலதா..!

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்பட பணிகள் முடிந்த பிறகு தனது 69 ஆவது படத்தில் நடிக்க உள்ள தளபதி விஜய் அந்த படத்தோடு தனது சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்து விட்டு முழு நேர அரசியல் களம் இறங்க உள்ளது அனைவரும் அறிந்த விஷயமே. இந்நிலையில், விஜயின் 68 மற்றும் 69 ஆவது ஆக இரு திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்பட பணிகள் ஏறத்தாழ 60% முடிவுற்ற நிலையில், தற்போது, கோட் படக்குழு அமெரிக்காவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!

விரைவில், இப்பட பணிகள் முடிவடைந்து தளபதி விஜயின் கோட் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா முதலில் மலேசியாவில் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதன் பிறகு சென்னையில் நடத்த திட்டமிட்டு இறுதி நேரத்தில் அதற்கு உரிய அனுமதி கிடைக்காத காரணத்தால் இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை. இருப்பினும் திரைப்பட இசை வெளியீட்டு விழா முன்கூட்டியே நல்ல திட்டமிடலோடு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா அல்லது சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளில் ஒரு இடத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் விஜய் அடுத்ததாக கூற இருக்கும் குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)

இந்நிலையில், கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு சில கண்டிஷன்களை போட்டுள்ளதாம். அதாவது, ஆரம்பத்தில் தி கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 55 கோடிக்கு கேட்டு பல கெடுபிடிகளை படத்திற்கு விதித்ததாம். அதாவது, படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவோம் என்றும், நாங்கள் சொல்லும் தேதியில் தான் படத்தை வெளியிட வேண்டும் என்றும், படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் இருக்கக் கூடாது என்றும், அடுக்கடுக்கான கண்டிஷன்களை போட்டிருக்கிறது.

இதற்கு, தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் ஓகே சொல்லிவிட்டதாம். ஆனால், இதன்பின் மற்றொரு இறுதி கண்டிஷன் ஆக சன் டிவிக்காக நடிகர் விஜய் இரண்டு மணி நேரம் ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டதற்கு நடிகர் விஜய் கொஞ்சம் கூட யோசிக்காமல் நோ சொல்லிவிட்டாராம். இதனால், கடுப்பான சன் பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை ரத்து செய்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து தற்போது ஜி நிறுவனத்திற்கு கோட் படத்தின் சேட்டிலைட் உரிமம் கை மாறி இருக்கிறதாம். இப்போதே இப்படி ஒரு சிக்கலை சந்தித்துள்ள விஜய் படத்தின் ரிலீஸ் போது என்னென்ன சிக்கல்களை சந்திக்க நேரிடுமோ என்று ரசிகர்கள் கதி கலங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஹாலிவுட் படங்களான அவதார், கேப்டன், மார்வெல், அவெஞ்சர்ஸ், என்ட் கேம் போன்ற படங்களுக்கு VFX செய்த குழுவினர் தற்போது, விஜய் நடிக்கும் கோட் படத்தின் காட்சிகளை அமைக்க உள்ளனர். இதன் மூலம் அந்நிறுவனம் கோலிவுட்டில் நுழைகிறது. இந்நிலையில், வெங்கட் பிரபு, கோட் படத்தின் முக்கிய VFX காட்சியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், AI மூலமாக விஜயகாந்தை பயன்படுத்தக்கூடாது என்று பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் புரட்சிக் கலைஞர் கேப்டனை AI தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. எனவே, இது போன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது.

எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில், பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும். AI தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்துவதாக இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, அனுமதி இல்லாமல் பத்திரிகை செய்திகள் ஊடக செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

50 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

52 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

1 hour ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

This website uses cookies.